திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுதாகர் (22) இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இந்நிலையில் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெங்கடேஸ்வரா லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.