முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

செல்லப் பிராணிகள் விற்கும் கடையை மாட்டிவிட்ட TTF வாசன்.

By Web Desk

Published on:

---Advertisement---

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன், தனது கையில் பாம்புடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், அவர் தனது பாம்புக்கு கூண்டு வாங்க சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடைக்கு சென்றதாகவும், அங்கு பாம்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் அந்த செல்லப் பிராணிகள் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அரியவகை கிளி மற்றும் ஆமைகள் கைப்பற்றப்பட்டன.

வனத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக விலங்குகளை வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நேரத்தில், டி.டி.எஃப். வாசன், தனது வீடியோவில் கூறியபடி, பாம்பை வளர்க்கும் அனுமதிகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.