கொடைக்கானலில் காட்டு பன்றி இறைச்சியை சமைத்த 3 பேரை கொடைக்கானல் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்து சாப்பிட்ட இசிசிரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(65), செந்தில்குமார்(48), விஜயகுமார்(28) ஆகிய 3 பேரை வனத்துறையினர் வன உயிரின சட்டப்படி கைது செய்து தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.